காலம் உள்ளவரை நம் மனதில் கலாம் இருப்பார்- டாக்டர் தி. தேவநாதன் யாதவ் புகழாரம்

செய்திகள் / தமிழ்நாடு

Published: Thursday, July 27 2023, 13:01:44

காலம் உள்ளவரை நம் மனதில் மங்காத புகழ்ழோடு திகழ்பவர் அப்துல் கலாம் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார். அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் தி. தேவநாதன் யாதவ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் நவீன இந்தியாவின் விஞ்னானியும், ஏழை எளிய குழந்தைகள் வழி தொடங்கி, ஏவுகணை திட்டம் வரை அனைத்து துறைகளும் தன் முத்திரையை பதித்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் நினைவை போற்றுவோம் என்றும். காலம் உள்ளவரை நம் மனதில் கலாம் இருப்பார் என இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் புகழாரம் சூட்டியுள்ளார்.