நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை

செய்திகள் / தமிழ்நாடு

Published: Thursday, July 27 2023, 12:45:46

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் 1000 கனஅடியாக இருந்த நீர்வரத்து 3,000 கனஅடியானது. நேற்றைய நிலவரப்படி ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6,000 கனஅடியாக இருந்த நிலையில், நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதையொட்டி பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நீர்திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரியத்தொடங்கியுள்ளது.