தமிழ்நாடு அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.85.24 கோடி: மத்திய அரசு அனுமதி

செய்திகள் / இந்தியா

Published: Thursday, July 27 2023, 11:11:10

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட 85.24 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள பல அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றி கல்வி அமைச்சகம் பரிசீலிக்கிறதா? என்பது குறித்து மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.அந்த பதிலில், 2023-2024-ம் ஆண்டில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடக்க மற்றும் உயர், மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளுக்கு 18 கோடியே 19 லட்ச ரூபாயும்,, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு 67 கோடியே 5 லட்ச ரூபாயும் என மொத்தம் ர85 கோடியே 24 லட்ச ரூபாய் அனுமதிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்