செங்கோல் குறித்து ஆவணப்படம் தயாரிப்பு- அனுராக் தாக்கூர்

செய்திகள் / இந்தியா

Published: Friday, July 28 2023, 13:34:05

செங்கோலின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்துவம் குறித்து ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள செங்கோல் குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் செங்கோல் குறித்த ஆவணப்படம் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தால் தயாரிக்கப்பட்டது. செங்கோலின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்துவம், தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சரின் கொள்கைக் குறிப்பு ஆகியவையும் அதில் இடம் பெற்றுள்ளது.செங்கோல் தொடர்பாகஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் கட்டுரைகளும் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பல்வேறு புத்தகங்களில் இருந்தும் குறிப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.