இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு அரங்கை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

செய்திகள் / இந்தியா

Published: Wednesday, July 26 2023, 13:08:08

இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு அரங்கை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டு அர்ப்பணித்தார். ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா உள்ளது. அதன்படி ஜி-20 தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டை வருகிற செப்டம்பர் மாதம் இந்தியா நடத்துகிறது. அதையொட்டி நாடு முழுவதும் 200 இடங்களில் பல்வேறு தலைப்பு.ஜி-20 தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் டெல்லியில் ஜி -20 உச்சி மாநாட்டுக்காக மறு வடிவமைக்கப்பட்ட இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு அரங்கை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டு அர்ப்பணித்தார்.இதற்கான சிறப்பு பூஜையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.