கனமழை எச்சரிக்கை எதிரொலி: தெலுங்கானாவில் இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

செய்திகள் / இந்தியா

Published: Wednesday, July 26 2023, 11:18:32

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, தெலுங்கானாவில் இன்று மற்றும் நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வரும்நிலையில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதன்படி தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத், ரங்கா ரெட்டி, மேட்சல், விகாராபாத், சங்கரெட்டி, மேடக், காமரெட்டி ஆகிய இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூலை 27 ஆம் தேதி வரை தெலுங்கானாவில் கனமழை தொடரும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஐதராபாத்துக்கு நாளையும் நாளை மறுநாளும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் அநேக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.