பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது?-சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

செய்திகள் / தமிழ்நாடு

Published: Wednesday, July 26 2023, 11:13:35

பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பால் விநியோகம் பாக்கெட்டில் இருந்து பாட்டிலுக்கு மாற்றலாமா என மக்களிடம் கேட்டதில் சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அப்போது, மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அத்துடன், மது அருந்துவோரே பாட்டிலை கவனமாகக் கையாளும்போது சாதாரண மக்கள் பாட்டிலை கையாள முடியாதா எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பால் விநியோகம் பாக்கெட்டில் இருந்து பாட்டிலுக்கு மாற்றலாமா என மக்களிடம் கேட்டதில் சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிறுவனம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆவின் நிறுவனத்தின் அறிக்கையால், உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தியடைந்த நிலையில், புதிய அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.