கடல் உள்வாங்கியதால் தரைத் தட்டி நின்ற படகுகள்

செய்திகள் / தமிழ்நாடு

Published: Thursday, July 06 2023, 08:46:22

ராமேஸ்வரம் அருகே 200 மீட்டர் தூரம் கடல் உள் வாங்கியதால் தரைத்தட்டி நின்ற படகுகளை மீட்கும் முயற்சியில் மீனவர்கள்  ஈடுபட்டனர்.


இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளிலும், 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும்  மீனவர்கள் கடலுக்குச் சென்று  மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில்  திடீரென 200 மீட்டர் தூரம் கடல் உள் வாங்கியதால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இதனால்  தரை தட்டி நின்ற படகுகளை மீட்கும் முயற்சியில்  மீனவர்கள் ஈடுபட்டனர்.  இது குறித்து விளக்கமளித்த  மத்திய கடல் ஆய்வாளர்கள்,  காலநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்குவதும் சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு வருவதும் வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்தனர்.