ஜடேஜாவிற்கு 25 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி உத்தரவு

செய்திகள் / விளையாட்டு

Published: Saturday, February 11 2023, 12:23:59


நாக்பூர்:

போட்டி விதிமுறைகளை மீறியதாக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவிற்கு ஊதியத்தில் 25 சதவீதம் அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது. 

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் நாள் போட்டியில் ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பந்தை வைத்திருந்த ஜடேஜா, தனது விரலில் ஏதோ ஒன்றை தேய்த்தார் . முகமது சிராஜிடம் இருந்து அதனை ஜடேஜா வாங்கி தனதுவிரலில் தேய்ப்பது வீடியோவின் மூலம் தெரிகிறது. இதனை ஆஸ்திரேலிய மீடியாக்கள்,பந்து வீச ஜடேஜா ஒருவகை கிரீமை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக தெரிவித்தது. ஆஸ்திரேலிய மீடியாக்களின் கருத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அணி நிர்வாகம் கூறுகையில், ஜடேஜா, தனது விரலில் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மருந்தையே பயன்படுத்தினார் என்றும், அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் தெரிவித்தது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை விதிகளை மீறியதாக ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25 சதவீதம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர்களிடம் தெரிவிக்காமல் கை விரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் அபாராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.