டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதி

செய்திகள் / விளையாட்டு

Published: Saturday, November 05 2022, 18:09:48


டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உறுதியானது.


டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. குரூப்-1 பிரிவில் சூப்பர் 12 சுற்றில்  இங்கிலாந்து-இலங்கை அணிகளுக்கியையேயான போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில்  8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா மட்டுமே 67 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அலக் ஹேல்ஸ் 47 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களும் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது.