ஆசியக்கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி

செய்திகள் / விளையாட்டு

Published: Thursday, October 13 2022, 13:56:03


வங்காளதேசம்:

தாய்லாந்து மகளிர் அணியை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி ஆசியக்கோப்பை இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது. 


மகளிர் ஆசியக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா , தாய்லாந்து அணிகள் மோதின. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷஃபாலி வர்மா 42 ரன்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 36 ரன்களும் எடுத்தனர். 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெடுகள் இழப்பிற்கு 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.