இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே இன்று முதல் ஒருநாள் போட்டி

செய்திகள் / விளையாட்டு

Published: Thursday, October 06 2022, 13:10:56


லக்னோ:

இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. 

தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டி, மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2 க்கும் 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் இன்று நடைபெற உள்ளது. பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜபாயி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு போட்டி துவங்கவுள்ளது.