இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி

செய்திகள் / விளையாட்டு

Published: Saturday, October 01 2022, 17:35:10


வங்காளதேசம்:

ஆசியக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. 


7 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் இன்று தொடங்கியது..இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பெண்கள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கி விளையாடிய இந்திய பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76 ரன்கள் குவித்தார். இதையடுத்து விளையாடிய இலங்கை பெண்கள் அணி 18 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது.  இந்தியா தரப்பில் தயாளன் ஹேமலதா 3 விக்கெட்டும், பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இதையடுத்து இந்திய மகளிர் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .