தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 - தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா விலகல்

செய்திகள் / விளையாட்டு

Published: Tuesday, September 27 2022, 13:23:14


திருவனந்தபுரம்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து  இந்திய அணி ஆல்ரவுண்டர்கள் தீபக் ஹூடா மற்றும் ஹர்திக் பாண்டியா விலகினர். 


டி20 உலக கோப்பைக்கு முன் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் விளையாடுகிறது. தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டி20 போட்டி நாளை  திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. 2-வது டி20 போட்டி அக்டோபர் 2ம் தேதி கவுகாத்தியிலும், 3-வது டி20 போட்டி அக்டோபர் 4-ம் தேதி இந்தூரிலும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக தீபக் ஹூடா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஷ்ரேயஸ் அய்யர் இடம் பிடித்துள்ளார். இதேபோல், ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.