வெள்ளீசுவர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

செய்திகள் / ஆன்மீகம்

Published: Monday, June 06 2022, 08:09:14

மயிலாப்பூர்  வெள்ளீசுவர் கோவிலில் வைகாசி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி மூலவர் வீதி உலா நடைபெற்றது.


சென்னை மயிலாப்பூரில் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த வெள்ளீசுவர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று  நான்கு மாடவீதிகளில் மூலவர் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.