சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

செய்திகள் / ஆன்மீகம்

Published: Friday, May 06 2022, 09:33:40

சபரிமலையில் வைகாசி மாத பூஜைக்கு, பக்தர்களின் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு துவங்கியது. 


வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை  மே 14ஆம் தேதி மணிக்கு திறக்கப்படுகிறது. மே 15 முதல்  மே 19 இரவு வரை பூஜைகள் நடைபெறும் எனவும், இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் எனவும் சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முன்பதிவு செய்து செல்லும் பக்தர்கள், கொரோனா இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட நெகட்டீவ் சான்றிதழ் கொண்டு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.