5 அடி உயரமுள்ள மரகதலிங்கம் சிலை கண்டெடுப்பு

செய்திகள் / ஆன்மீகம்

Published: Saturday, April 16 2022, 11:34:53

ஆம்பூர் அருகே வீடு கட்ட குழி தோண்டியபோது 5 அடி உயரமுள்ள மரகத லிங்கம் சிலை கண்டெடுக்கப்பட்டதால் அதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் தரிசித்து வருகின்றனர்.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் சின்னவரிகம் பகுதியை சேர்ந்த பால் வியாபாரி சின்னப்பன் என்பவருக்கு சொந்தமான காலி இடத்தில் வீடு கட்ட குழி தோண்டியபோது 5 அடி உயரமுள்ள பச்சைக்கல்லால் ஆன மரகதலிங்கம் சிலை கண்டெடுக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமிதரிசனம் செய்து சென்றனர்.

இந்த சிலையானது சோழர் காலத்தின் சிலையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை ஆம்பூர் வட்டாட்சியர் பழனி தலைமையிலான வருவாய்த்துறையினர் சிலையை மீட்டு எடுத்து சென்றனர்.