தருமபுரம் ஆதீன பட்டணப்பிரவேசத்திற்கான தடை நீக்கம்

செய்திகள் / ஆன்மீகம்

Published: Sunday, May 08 2022, 16:28:52

தருமபுரம் ஆதீன பட்டிணப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை  நீக்கி கொள்வதாக மயிலாடுதுறை ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டார்.


வரும் மே 22 ஆம் தேதி நடைபெறவிருந்த தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு மயிலாடுதுறை ஆட்சியர் தடை விதித்தார். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழக பாஜகவினர், தாங்களே நேரில் சென்று பல்லக்கை தூக்கவும் தயார் என தெரிவித்திருந்தனர். பட்டிணப் பிரவேசத்திற்கு விதித்த தடையை நீக்க முதலமைச்சரை சந்தித்து ஆதீனங்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தருமபுரம் ஆதீன பட்டிணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து வருகின்ற 22ஆம் தேதி பட்டணப்பிரவேச நிகழவு நடைபெற உள்ளது.