மீனாட்சி அம்மன் கோயில் திருத்தேரோட்டம்

செய்திகள் / ஆன்மீகம்

Published: Friday, April 15 2022, 13:04:54

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்  திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. 


உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் சித்திரைத்திருவிழாவின்  முக்கிய நிகழ்வான  திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து நடைபெற்ற தேரோட்டத்தையொட்டி மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பிரியாவிடை  சமேதராக ஒரே வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் மீனாட்சியும், சுந்தரேசுவரரும் எழுந்தருளினர். இதையடுத்து பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். இந்த தேரினை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் திருவிழாவைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.