உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள்

செய்திகள் / ஆன்மீகம்

Published: Friday, April 15 2022, 08:58:22

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள  தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. 



உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. சென்னையில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் இன்று நடைபெற்றது. இன்று காலை முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது . சென்னையில் சாந்தோம் பசிலிகா, பெசன்ட் நகர் வேளாங்கண்ணி  தேவாலயம், ஜெமினி கதீட்ரல் தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், பெரம்பூர் லூர்து மாதா தேவாலயம், வேப்பேரி செயின்ட் பால் தேவாலயம், பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் சிறப்பாக நடைபெற்றது.