மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

செய்திகள் / ஆன்மீகம்

Published: Thursday, April 14 2022, 11:51:53

சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.



மதுரையில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டும் பட்டாபிஷேக விழா கடந்த 12 ஆம் தேதி இரவு கோலாகலமாக நடைபெற்றது. சித்திரைப் பெருவிழாவின் பிரதான நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வு இன்று காலை மிதுன லக்னத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது சுமங்கலி பெண்கள் மாங்கல்யம் மாற்றிக்கொண்டனர்.  சித்திரை திருவிழாவின் மற்றுமொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 15 அன்றும், உச்ச நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16 காலை நடைபெறவுள்ளது.