திருப்பதி எழுமலையான் கோயில் கூட்ட நெரிசலால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

செய்திகள் / ஆன்மீகம்

Published: Wednesday, April 13 2022, 08:49:03

திருப்பதி  எழுமலையான் கோவிலில்  கூட்ட நெரிசலால் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யபட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


திருப்பதி  எழுமலையான் கோவிலில்  சுவாமி தரிசனம் செய்வதற்கு நேற்று காலை சர்வ தரிசன டோக்கன் வழங்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த்தால்  பெண்கள், குழந்தைகள் என பலர் கூட்டத்தில் சிக்கி தவித்தனர். இதையடுத்து இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யபட்டுள்ளது.திருமலைக்கு வரும் பக்தா்கள் தங்கள் பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.