161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

செய்திகள் / ஆன்மீகம்

Published: Sunday, April 10 2022, 11:13:00

கர்நாடகா மாநிலம் துமகூருவில் அமைக்கப்பட்டுள்ள 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். 


கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பிதனகெரே கிராமத்தில் பசவேசுவரா மடம் உள்ளது. இந்த மடத்தில் உலகிலேயே மிகவும் உயரமான  161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயசாமி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இன்று ராமநவமியையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலமாக, சிலையை திறந்து வைக்க உள்ளார்.இந்த நிகழ்ச்சிக்கு முதலமைச்சர்  பசவராஜ் பொம்மை தலைமை தாங்க இருக்கிறார். இதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக துமகூருவுக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை செல்ல இருக்கிறார். பின்னர் ஆஞ்சநேய சாமி சிலை திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.