சித்திரை திருவிழா கொடியேற்றம்

செய்திகள் / ஆன்மீகம்

Published: Wednesday, March 30 2022, 14:17:18

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தஞ்சை பெரிய கோவிலில்  சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு,  பட்டுத் துணிகள் கொண்டு  கொடி ஏற்றி வைக்கப்பட்டது.   பின்னர் பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. 18 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.