முருகன் வள்ளி தெய்வானை திருமண வைபவ நிகழ்ச்சி

செய்திகள் / ஆன்மீகம்

Published: Saturday, March 19 2022, 08:44:14

திருவெறும்பூர்  அருகே முருகன் வள்ளி தெய்வானை திருமண வைபவ நிகழ்ச்சி வாணவேடிக்கையுடன் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.


திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்றது.காலை முதல் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று அதனைத் தொடர்ந்து, இரவு ஸ்ரீ முருகப் பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு அண்ணாநகர் தெய்வ வழிபாட்டு மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.