கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் திருக்கல்யாணம்

செய்திகள் / ஆன்மீகம்

Published: Saturday, March 19 2022, 07:52:56

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவில் கடைசி நிகழ்வாக கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.    


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு பங்குனி பெருவிழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிலையில், பங்குனி பெருவிழாவின் கடைசி நிகழ்வாக, கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருக்கல்யாண வைபவம்  வெகு விமரிசையாக நடைபெற்றது.   இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.