மழை பாதிப்புகளை கண்டறிய 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

செய்திகள் / சற்றுமுன்

Published: Sunday, November 07 2021, 16:32:19

சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. 





சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக வடசென்னை பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மண்டலம் வாரியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 1 ஆம் மண்டலத்திற்கு ஏ.கே. கமல் கிஷோர்ரும், இரண்டாம் மண்டலத்திற்கு கணேசனும், 3 ஆம் மண்டலத்திற்கு சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.