தமிழகத்தில் இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குகிறது

செய்திகள் / கல்வி

Published: Friday, May 06 2022, 08:32:35

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கவுள்ளது. 


தமிழகம் முழுவதும் இன்று தொடங்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.  இத்தேர்வினை  தமிழகத்தில் 9 லட்சத்து 55 ஆயிரத்து 139 மாணாக்கர்கள்  எழுதவுள்ளனர்.  முதல் தேர்வான தமிழ் பாட தாள் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. மேலும் தனித் தேர்வர்கள் 30 ஆயிரத்து 765 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர்.