12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம்

செய்திகள் / கல்வி

Published: Thursday, May 05 2022, 08:57:18

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது.


கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணாக்கர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.  1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணாக்கர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். 

நாளை 10ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கும், மே 9ஆம் தேதி 11ம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்வில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் கண்காணிக்க ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.