தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆளுநர்

செய்திகள் / கல்வி

Published: Monday, April 25 2022, 14:05:17

பல்கலைக்கழகங்கள் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.


உதகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.அதில், புதிய கல்விக் கொள்கை மாணவர்களின் அறிவை வளர்க்கும் என அவர்  கூறினார். பல்கலைக்கழகங்கள் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் தளத்தில் பட்டப்படிப்புகளை படிக்க பல்கலைக்கழகங்கள் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் எனவும்  அவர் கேட்டுக்கொண்டார். இந்த மாநாட்டில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெதீஷ் குமார்,அரசு மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.