இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு படிக்க வேண்டாம்: யுஜிசி

செய்திகள் / கல்வி

Published: Saturday, April 23 2022, 14:37:16

 இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டாம் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. 


டெல்லி : இந்தியர்களோ அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்களோ பாகிஸ்தானில் மேற்படிப்பு பயின்றால் அவர்களது பட்டம் இந்தியாவில் செல்லாது என பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவித்திருக்கின்றன.

மேலும் இந்தியாவில் அவர்கள் வேலைவாய்ப்பு பெறவும் முடியாது என யூஜிசி தெளிவுபடுத்தியுள்ளது.  இருப்பினும், பாகிஸ்தானில் உயர்கல்வி பயின்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் சான்றிதழ் அங்கீகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்தியாவில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என யுஜிசி தெரிவித்திருக்கிறது.