11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுக்கான நேரம் குறைப்பு

செய்திகள் / கல்வி

Published: Saturday, April 23 2022, 14:31:06

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.


சென்னை : 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள் வரும் திங்கட்கிழமை முதல் நடைபெற உள்ளது. இதற்கான சுற்றறிக்கைகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ளனர். சுற்றறிக்கையில் செய்முறைத்தேர்வுக்கான நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலங்களில் செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்கள் 50 ஆக இருந்தது. இது தற்போது 30 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. 200 மதிப்பெண்களை கொண்ட ஒரு பாடத்தின் மதிப்பெண்கள் ஒட்டுமொத்தமாக 100 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், செய்முறைத்தேர்வுக்கான மதிப்பெண்களும் 50 லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 30 மதிப்பெண்கள் 10 மதிப்பெண்ணாக  மதிப்பீட்டு  வழங்கப்படுகிறது.