திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்

செய்திகள் / கல்வி

Published: Thursday, April 14 2022, 15:43:56

ப்ளஸ் டூ வகுப்புக்கான திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார். 


சென்னையில், தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கமும், தனியார் கல்லூரி ஒன்றும் இணைந்து நடத்தும் செய்திவாசிப்பாளர், செய்தியாளர் பயிற்சி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்ததார். விழாவில் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டடனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ப்ளஸ் டூ வகுப்புக்கான திருப்புதல் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்தார். மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளைச் சந்திக்க இது உதவும் என்று அவர் கூறினார்.