ஜூலை 17ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் - தேசிய தேர்வு முகமை

செய்திகள் / கல்வி

Published: Thursday, March 31 2022, 08:33:44

ஜூலை 17ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெறும் என  தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்  நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும். நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி மே 7ஆம் தேதி   வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.  மேலும் கடந்த ஆண்டும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில் இந்த ஆண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.