இந்தியர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் - ஹங்கேரி பிரதமர்

செய்திகள் / கல்வி

Published: Thursday, March 10 2022, 10:07:55

உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்தியர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பைத் தொடரலாம் என அந்நாட்டு அதிபர் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் கூறியுள்ளார்.


உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த பின்னால், இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இந்நிலையில், ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பனுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் கலந்துரையாடினார். 

உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவியதற்காக ஹங்கேரி பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். உக்ரைனில் இருந்து ஹங்கேரி வாயிலாக இந்தியா திரும்பியவர்களுக்கு ஹங்கேரி பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். 

மேலும், உக்ரைனில் இருந்து பாதியிலேயே படிப்பை தொடரமுடியாமல் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் என ஹங்கேரி பிரதமர் தெரிவித்தார்.