பிரான்சில் நடக்கும் கலவரம் 5வது நாளை எட்டி உள்ளது

செய்திகள் / உலகம்

Published: Sunday, July 02 2023, 09:53:22

பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டதற்கு எதிராக நடக்கும் கலவரம் 5வது நாளை எட்டி உள்ளது. 


பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு உட்பட்ட நான்டர்ரே புறநகரில் நஹேல் சிறுவன் கீழ்படியவில்லை என்பதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உயிரிழந்தார். இச்சம்பவம் மக்கள் இடையே கடும் எதிர்ப்பை கிளப்பியது. எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் எண்ணற்ற கடைகள், கார்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டன. போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், கலவரம் 5வது நாளாக நீடித்து வருகிறது.ஸ்டராஸ்போர்க் என்ற நகரில் செயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் கடைக்குள் உள்ளே புகுந்த வன்முறையாளர்கள், அடித்து நொறுக்கினர். துப்பாக்கி கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த ஆயுதங்களை அள்ளிச்சென்றனர். இது தொடர்பாக 90 பேரை போலீசார் கைது செய்தனர். ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் பங்கேற்க வெளிநாடு சென்றிருந்த அதிபர் இமானுவேல் மேக்ரான், அவசரமாக நாடு திரும்பி கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கலவரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார். இந்த செயல் முற்றிலும் பொறுப்பற்றதனமானது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சமூக வலைதளங்களிலும் பயனாளர்கள், அதிபர் மேக்ரானை வசைபாடி வருகின்றனர்.