ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய நபர்

செய்திகள் / உலகம்

Published: Saturday, April 15 2023, 11:34:38


ஓடும் காரில் இருந்து பணத்தை அள்ளி வீசிய அமெரிக்க நபரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

அமெரிக்காவை சேர்ந்த நபர் கோலின் தேவிஸ் மெக்கர்தி.  இவர், கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு அங்குள்ள நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது பணத்தை அள்ளி வீசியுள்ளார்.  இதுகுறித்து போலீசார் சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டு விசாரணை நடத்தினர். இதில், தனது பணத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் பணத்தை அள்ளி வீசியதாக மெக்கர்தி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அள்ளி வீசிய பணத்தின் இந்திய மதிப்பு சுமார் 16 கோடி ஆகும். இதுகுறித்து ஓரிகான் மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் கேப்டன் கைல் கென்னடி பொதுமக்கள் யாரும் நெடுஞ்சாலையில் பணத்தைத் தேட வேண்டாம் என்றும். மிகவும் ஆபத்தானது மற்றும் அபாயகரமான நிலைக்கு அவை பங்களிக்கிறது என்றார்.