உக்ரைன்: குடியிருப்பு பகுதியில் ரஷிய ஏவுகணை தாக்கி 8 பேர் உயிரிழப்பு

செய்திகள் / உலகம்

Published: Saturday, April 15 2023, 11:29:23


உக்ரைனில் மக்கள் வசிக்க கூடிய குடியிருப்பு பகுதியில் ரஷிய ஏவுகணை தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதியில், ரஷியா படையெடுத்தது. இந்த போரானது, ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.இந்நிலையில், உக்ரைனின் கிழக்கே சுலோவியான்ஸ்க் நகரில் குடியிருப்பு பகுதியில் ரஷியாவின் 7, எஸ்-300 ரக ஏவுகணைகள் தாக்கி உள்ளன என  டோனெட்ஸ்க் பகுதியின் ஆளுநர் பாவ்லோ கிரிலென்கோ கூறினார். இந்த ஏவுகணை தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததாகவும்,  21 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் என கூறியுள்ளார். மேலும், பாக்முத் நகரை ரஷியா ஆக்கிரமித்து வரும் சூழலில் இன்னும் பல மாவட்டங்களை கைப்பற்றும் முயற்சியில் இருப்பதாக  ரஷியா தெரிவித்து உள்ளது.