ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசிய நபரை கைது

செய்திகள் / உலகம்

Published: Saturday, April 15 2023, 05:52:02


ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசிய நபரை கைது செய்து  ஜப்பான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


ஜப்பான் பிரதமராக பதவி வகித்த ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் பிரச்சாரத்தின்போது சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து புமியோ கிஷிடா பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் ஜப்பான் வயகமா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் புமியோ கிஷிடா மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது குண்டு வெடித்தது. குண்டு வெடித்த இச்சம்பவத்தில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாதுகாப்பு வீரர்கள் அவரை பத்திரமாக வெளியேற்றினர். பிரதமரை நோக்கி குண்டு வீசியதாக ஒருவரை கைது செய்த ஜப்பான் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் குண்டு வீசப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.