பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல் பங்குகள் மூடல்

செய்திகள் / வர்த்தகம்

Published: Saturday, February 11 2023, 02:46:07

பாகிஸ்தானில் பொருளாதார தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் விளைவாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சம் தொட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏராளமான பெட்ரோல் நிலையங்களில் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.