முன் விரோதம் காரணமாக மாணவனுக்கு அரிவாள் வெட்டு

செய்திகள் /

Published: Thursday, July 27 2023, 12:53:16

சிவகங்கை அருகே விளையாட்டில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு, 4 சிறுவர்களின் வெறிச்செயலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சாத்திரசன் கோட்டையைச் சேர்ந்த திருமுருகன், அருகிலுள்ள மல்லல் உயர்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகின்றார். இவர் சாத்திரசன் கோட்டையில் உள்ள மைதானத்தில் கைப்பந்து விளையாடும் போது சக வீரர்களுடன் முன்பு விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது மரக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே 4 பேரும் சேர்ந்து திருமுருகனை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனைதொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 4 சிறூவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.